Sunday, March 05, 2017

பொது தேர்வு பயம் போக்க கட்டணமில்லா தொலைபேசி திருவண்ணாமலை மாவட்டத்தில்

பொது தேர்வு பயம் போக்க கட்டணமில்லா தொலைபேசி

தமிழகத்தில், முதன் முறையாக, திருவண்ணாமலை மாவட்டத்தில், பொதுத்தேர்வு மாணவர்களுக்கு, கட்டணமில்லா தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமார் கூறியதாவது: 

திருவண்ணாமலை மாவட்டத்தில், 27 ஆயிரத்து, 889 மாணவ,- மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். 31ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு பயத்தால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்கவும், அவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கவும், தமிழகத்திலேயே முதன் முறையாக, திருவண்ணாமலை மாவட்டத்தில், கட்டணமில்லா தொலைபேசி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 1800--121--7030 என்ற எண்ணை, காலை, 9:00 முதல், இரவு, 9:00 மணி வரை, தொடர்பு கொண்டு, தேர்வு மற்றும் பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை, மாணவர்கள் கேட்கலாம். மறுமுனையில், பயமின்றி தைரியமாக தேர்வு எழுதுவது குறித்து, ஆசிரியர்கள் ஆலோசனை வழங்குவர். இவ்வாறு அவர் கூறினார்.
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.